Archives

Aanantha Thuthi Oli ketkum

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…

மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…

ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…

யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…

Neer Mathram Pothum

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
 
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
 
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம் தந்தீர்
என் உள்ளத்திலே
 
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
 
இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
 
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
 
 

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க
யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (2)
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?

சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீங்க (2)
தேவை எல்லாமே நீங்க தான் அப்பா
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா? (2)
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?

பக்தர்களா ? இயேசுவின் சீஷர்களா?

Religious Or Disciple Of The Lord Jesus ?

01. Readiness For Christs Return

02. Gods Word Versus Mans Traditions

03. Salvation From The Love Of Money

04. The Holy Spirit Brings Us Freedom

05. What Jesus Valued Most

06. Prophecy And Prayer

07. The New Covenant Life Of Abundance

08. Since God Is For Us, We will Always Overcome