இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந் நாளிலே

எங்கள் தேவனே
எங்கள் இராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் வாழ்ந்திடுவோம்

பொன்னை நாடி மண்ணை அடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயத்தைப் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
(எங்கள் தேவனே……)

உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ பாவியே நீ
இன்று இயேசுவண்டை வாராயோ
சாகா ஜீவன் கண்டடைய
(எங்கள் தேவனே….)

Leave a Reply