Yearly: 2019

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் (பாகம் 2)

https://www.tamilchristianassembly.de/music/album/145/s-j-berchmans/jebathotta-jeyageethangal-vol-2

மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை – என்
அன்பர் இயேசுவுக்கே

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நல்லவர் சர்வ வல்லவர் – நீர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா

எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா

சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு

உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும்

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – தேவா

கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு

எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்

அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்

அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்

செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
 
மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
 
தனிமை வாட்டும்போது – நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
 
வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ…
 
இலவலசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
 
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை
 
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
 
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

உம்வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
நிச்சயம் நிச்சயம்
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
 
உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்
 
ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு
 
கர்த்தருக்குள் நம்பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்
 
நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

பிரதான ஆசாரியரே (பாகம்1)

https://www.tamilchristianassembly.de/music/album/166/joseph-aldrin/pirathaana-aasariyarae-vol-1


ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல
என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தயில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே
விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா


நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

உம்மை போற்றுவேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – எங்கள்

என் விண்ணப்பத்தின்
சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போஷித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா  – வார்த்தையால்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்


தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

மலைபோல துன்பம் எனை சூழும் போது
அதை பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறிந்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே 
நீர் போதும் என் வழ்விலே – இயேசைய்யா

ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம்
ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டது யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா


பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே
யேஷுவா  x 8

எங்கள் பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8
எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில்
தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8 
எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8
எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8
எங்கள் பிரதான ஆசாரியரே

பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும் கிருபை விலகாதைய்யா
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்  – என்மேல்
பாவங்களை மன்னீத்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால் 
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன்
பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
எதுவும் என்னை அணுகுவதில்லை
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
குற்றப்படும்படி செய்திடுவீர்
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது
மலைகள் விலகினாலும்

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் –  என்னை

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
அசைவுற விடமாட்டீர் –  என்னை

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
அசைவுற விடமாட்டீர் –  என்னை

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
அசைவுற விடமாட்டீர் –  என்னை

தலை சாய்க்கும் கல் நீரைய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின்  தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று
ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்

உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை

நண்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்

உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை

ஆட்டுக்குட்டியானவரே
எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே
என் பாவங்கள் சுமந்தீர்
உமக்கே எங்கள் ஆராதனை

பரிசுத்தம் உள்ளவர் நீர்
பாவமாய் மாற்றப்பட்டீர்
நீதிமானாக என்னை மாற்றினீர்
கிருபையால் இலவசமாய் நீதிமானேனே
சிலுவை மரணத்தில்
என் பாவங்கள் நீங்கியதே

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்
ஆசீர்வாதமாக என்னை மாற்றீனீர்
ஆசீர்வாதமானேனே (நீர்)
எனக்காய் சாபமானதனால்
சிலுவை மரணத்தில் (என்)
என் சாபங்கள் நீங்கியதே

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர்
எல்லாமே இழந்தீரே
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே
செல்வந்தனாய் ஆனேனே
நீர் ஏழ்மையானதனால்
சிலுவை மரணத்தில்
என் தரித்திரம் நீங்கியதே

என் பாவம் யாவையும்
உடலிலே சுமந்தீரே
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே
பாவத்தின் விளைவுகளை உம்
மரணத்தால் வென்றீரே
காயங்களால் நான் சுகமனேனே – உம்

வல்லமையும் பெலனும்
ஞானமும் ஐஸ்வர்யமும்
மகிமையும் ஸ்தோத்திரமும்
உமக்கே உரியதே

இயேசுவே இயேசுவே
ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா
மகிமைக்கும் பாத்திரரே

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் (பாகம் 1)

https://www.tamilchristianassembly.de/music/album/42/s-j-berchmans/jebathotta-jeyageethangal-vol-1

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்


சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே, குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்

எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார்

ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும்

என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்


இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்


ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
அகன்று போகமாட்டேன்

ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்

வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்

வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்

நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு

தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்


கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்


நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே

அருகில் வந்தாரே
மனது உருகினாரே

இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே

எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே

காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே

சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே

மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே


வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்

வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே

ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்

காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்


ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்


நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயா

காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா

வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா

ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா

அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே


உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார்

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இரக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காக்கின்றார்
அவர் எனது ஆத்துமாவை
அநுதினம் காத்திடுவார்

போகும்போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார்


இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா

நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்

வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்


பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

உதவி வருகிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

ஆயத்தமா (பாகம் 1)

https://www.tamilchristianassembly.de/music/album/37/ravi-bharath/aayathamaa-vol-1


ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை
மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்
பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்
பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அட
இன்று போல் நாளையும் ஆயத்தமா


அந்த சூரியன் அந்த சந்திரன்
இந்த பூலோகம் யாவும்
அந்த மழைத்துளி இந்த பனித்துளி
இயற்கை அழகு யாவும்
படைப்பே உந்தன் படைப்பே
அதை நினைத்து மனம் மகிழ்ந்து
உம்மை வாழ்த்திடுவேனே

வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்
மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும்
நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே

மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர்
கண்ணீரை இதயத் துடிப்பும் நீரே


இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்


எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா

கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்திரித்தது
அல்லேலூயா அல்லேலூயா

பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்ந்தது
கர்த்தரை மனமும் போற்றியது
அல்லேலூயா அல்லேலூயா

வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய்  உயிர் கொடுத்தாரே
அவரை  உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

யோர்தானைக் கடந்தோம் எரிகோவை தகர்த்தோம்
ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா


ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே

கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்


பிதாவே போற்றி
குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி

யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்

யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்

யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்

யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்


யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே

இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா


நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல – அவர்
கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை – அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது – அவர்
செய்கை புரியாது

தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் – உன்னை
விடுவித்து காப்பார்

பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே – இன்றும்
அதைச் செய்வாரே


உலகம் தோன்றும் முன்னே உன்னை
தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்
கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்


வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
உன் கஷ்டங்கள் அறிவார்
உன் கண்ணீரை அறிவார்
உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்

உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
முழுதான மனதோடு துதியோடு

உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
பதறாதே தயங்காதே மயங்காதே

பரலோக சங்கீதம் (பாகம் 1)

https://www.tamilchristianassembly.de/music/album/48/levlin-samuel/paraloga-sangeetham-vol-1


கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்
சந்தோசமாய் இருங்கள்
ஓன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்

இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே

எல்லாப் புத்திக்கும் மேலான
தேவ சமாதானம் இருதயத்தை
இயேசுக்கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பிக் காத்துக் கொள்ளும்

இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
அவர் இருப்பதால் பயமில்லையே
தேவன் என் துணையே


இரத்தத்தால் என்னை மூடிக்கொள்ளும்
இரத்தத்தால் என்னை மறைத்துக் கொள்ளும்
இயேசுவின் இரத்தம் எங்கள் பாதுகாப்பு
இயேசுவின் இரத்தம் ஜெயம் தருமே

கல்வாரி இரத்தம் என் மேலேயுள்ளது
மின்னும் சுடரொளிப் பட்டையமே
சாத்தான் என்னை நெருங்காமல்
அக்கினி வேலி அடைத்துக் கொள்வேன்

எகிப்திலே சங்காரம் நடந்தபோது
இஸ்ரவேல் ஜனங்களை மீட்ட இரத்தம்
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த
தேவாட்டுக் குட்டி இயேசு இரத்தம்

பஸ்காவின் இரத்தம் பரிசுத்தமானது
வீடுகள் நிலைக்காலில் பூசிக் கொள்வோம்
எங்கள் குடும்பங்கள் சபைகளில் தெளித்துக்கொள்வோம்
பாளயம் முழுவதும் காவல் செய்வோம்


நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா நன்றி
நீர் செய்த எல்லா நன்மைக்காய் நன்றி

நன்றி மறவாத இதயத்தைத் தாரும்
நாள்தோறும் உம்மைத் துதிக்க வேண்டுறேன்

இன்றும் நாங்கள் உம்மைத் தேடிவந்தோம் தேவா
நல்லாசி கூறி ஆசீர்வதியும்

பெலவீனன் என்று தள்ளிவிடாமல்
எனக்காய் பரிந்து பேசும் ஆசாரியர் நீரே


சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும்
பரிசுத்த தேவன் அவரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு
நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

தேவ மகிமை சூழட்டுமே
தேவ கிருபை தாங்கட்டுமே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா


சிங்காசனத்தில் வீற்றிருப்பார் தேவன் இயேசுக்கிறிஸ்து
துதிகனம் மகிமையெல்லாம் அவருக்கே செலுத்திடுவோம்

ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர் ஆட்டுக்குட்டி ஆனவரே
உன்னதமானவரே உலகத்தின் ஒளி நீரே

தேவன் சபையில் வாசமாகி நடுவிலே உலாவுகின்றார்
அற்புத தேவன் நீரே அதிசயமானவரே

இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை தொழுகிறோம் பணிந்திடுவோம்
சர்வ வல்லவரே பரிசுத்தமுள்ளவரே


இயேசுவை அறைந்தார்கள் சிலுவையிலே
ஆணி அடித்தார்கள் கரங்களிலே
முள்முடி சூட்டி வாரினால் அடித்து
குத்தினார் விலாவிலே

கொல்கதா மலையில் குமாரன் இயேசு
திருரத்தம் சிந்தினார்
என் பாவம் நீங்கி சுகமாய் நான் வாழ
ஜீவ பலியாகினார்

நல்லோர்கள் மேலும் தீயோர்கள் மேலும்
நன்மைகள் செய்யும் தேவன்
அடிமையின் ரூபம் தாழ்மையின் கோலம்
எனக்காக எடுத்து வந்தார்

என் நோய்கள் சுமந்தார் வியாகுலம் அடைந்தார்
ஆத்தும மீட்பரே
கல்வாரி அன்புக்கு நிகரொன்றும் இல்லை
என்னைத் தாழ்த்திடுவேன்


மணவாளன் வரும் நேரம் மணவாட்டி சபையே – நீ
விழித்திருந்தால் பாக்கியமே புத்தியுள்ள கன்னிகைபோலாவாய்

ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு
அழைக்கப்பட்டோர்கள் பாக்கியவான்கள்
நேசர் வந்து கதவைத் தட்டும் நேரத்தில் விழித்திருப்போர்
பாக்கியவான்கள் பாக்கியவதிகள்

ஏழு பொன் குத்துவிளக்கின் மத்தியிலே உலாவும்
மனுஷ குமாரன் சீக்கிரம் வருகிறார்
நியாயம் செய்யும் தேவன் வாசலில் வந்துவிட்டார்
விழித்திருப்போமே வானைநோக்கியே


பரலோக சந்தோஷம் பாரினில் வந்து
என்னைப் பரவசப்படுத்துகிறதே
பரமபிதா நீர் எந்தன் தந்தை
பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன்

புத்திர சுவீகார ஆவியினால்
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்
புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர்
அது உன்னத பெலன் அல்லவா

என் பிரிய இயேசு என் இனிய நேசர்
என்னோடு இருப்பார் என்றும்
ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார்
தெய்வீகமான அன்பே

பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே
அந்தப் பரமனைக் கண்டுகொண்டேன்
அவர் திருவாய் மொழி எனக்கு அருமருந்தாகுமே தினமும்
பலகோடி துதி பாடுவேன்


கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்
அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே

இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே
நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே
சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு
சர்வ வல்லமை உடையவரே

வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள்
நமக்காய் தந்தவர் அவரல்லவா
விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம்
ஆவியின் பட்டயம் என்றே

நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம்
எரிகோ மதில் எழுந்து நின்றால் என்ன
யூதாவின் துதியினால் இடிந்துவிழும்
பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன

செங்கடலைக் கடந்து முன்னேறுவோம்
அக்கினி ஸ்தம்பம் வரும் மேக ஸ்தம்பம் வரும்
முன்னும் பின்னும் அவர் சமூகம்
நாங்கள் எக்காளம் ஊதிச்செல்வோம்


Neer Ennai – நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

Uyirodu Elunthavare – உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்

அல்லேலூயா ஒசன்னா

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்

அல்லேலூயா ஒசன்னா

En indhayam Sollum – என் இதயம் சொல்லும்

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று

உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்

கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே

இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து தேற்றினீரே

Ennila Adangatha – எண்ணில்லடங்காத ஸ்தோத்திரம்

எண்ணில்லடங்காத ஸ்தோத்திரம் சுவாமி
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

வானாதி வானங்கள் யாவும்
அதின் மேலுள்ள  ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
சுவாமி உம்மைப் போற்றுமே

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே

நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே
பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து போனதே…

நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே
நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)
ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே
கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)
நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் – (2)
மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து போனதே…

மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே
மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே – (2)
பாலைவனத்தில் நீரூற்றினீர்
சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் – (2)
தந்தையாய் என்னை இங்கு தேற்றி விட்டீரே
சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே – (2)
சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து போனதே…

கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை
தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை – (2)
தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் – (2)
எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே – (2)
கானானின் தேசத்தின் அன்பான தேவனே
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் –

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே
பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இந்தப் பாவி நான் – இந்தப் பாவி நான்

  • Page 1 of 2
  • 1
  • 2