Song: Unthan Anbai (உந்தன் அன்பை நான்)

உந்தன் அன்பை நான் உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன்
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன்

இயேசுவே எந்தன் இராஜனே
இயேசுவே எந்தன் நேசரே
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன்

கல்வாரி காட்சியைக் கண்டபின்னே
என் மனம் உருகத்தொடங்கியதே (2)
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன் (2)

எனக்காக ஏற்றுக்கொண்ட காயங்களெல்லாம்
இப்பொழுதே முத்தமிடத் துடிக்கிறேனே (2)
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன் (2)

எனக்கென்று இவ்வுலகில் எதுவுமில்லை
நான் வாழும் இவ் வாழ்க்கை நீர் தந்தது (2)
உந்தன் அன்பை நான் உணர்ந்துவிட்டேன்
உம் அன்பை சொல்லி என்றும் வாழ்ந்திடுவேன் (2)

இயேசுவே எந்தன் இராஜனே
இயேசுவே எந்தன் நேசரே (2)

Leave a Reply