Category: Video

Neer Ennai – நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

Uyirodu Elunthavare – உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்

அல்லேலூயா ஒசன்னா

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்

அல்லேலூயா ஒசன்னா

En indhayam Sollum – என் இதயம் சொல்லும்

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று

உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்

கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே

இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து தேற்றினீரே

Aanantha Thuthi Oli ketkum

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…

மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…

ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…

யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…

Neer Mathram Pothum

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
 
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
 
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம் தந்தீர்
என் உள்ளத்திலே
 
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
 
இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
 
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு