Neer Ennai – நீர் என்னை தாங்குவதால்
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
Leave a Reply
You must be logged in to post a comment.