Category: Songs

யார் வேண்டும் நாதா

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ (2)
பாழாகும் லோகம் வேண்டாமைய்யா
வீணான வாழ்க்கை வெறுத்தேனைய்யா (2)

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ (2)
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும் (2)

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா (2)
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால் (2)

என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால் (2)
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின் பாதம் சரணடைந்தேன் (2)

இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந் நாளிலே

எங்கள் தேவனே
எங்கள் இராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் வாழ்ந்திடுவோம்

பொன்னை நாடி மண்ணை அடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயத்தைப் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
(எங்கள் தேவனே……)

உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ பாவியே நீ
இன்று இயேசுவண்டை வாராயோ
சாகா ஜீவன் கண்டடைய
(எங்கள் தேவனே….)

Song: En Vaazhvil Ellamae

என் வாழ்வில் எல்லாமே…

Song: En Vaazhvil Ellamae

Gepostet von Tamil Christian Assembly am Freitag, 28. Juli 2017

Song: Unthan Anbai (உந்தன் அன்பை நான்)

உந்தன் அன்பை நான் உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன்
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன்

இயேசுவே எந்தன் இராஜனே
இயேசுவே எந்தன் நேசரே
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன்

கல்வாரி காட்சியைக் கண்டபின்னே
என் மனம் உருகத்தொடங்கியதே (2)
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன் (2)

எனக்காக ஏற்றுக்கொண்ட காயங்களெல்லாம்
இப்பொழுதே முத்தமிடத் துடிக்கிறேனே (2)
உந்தன் அன்பை உணருகிறேன்
என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திடுவேன் (2)

எனக்கென்று இவ்வுலகில் எதுவுமில்லை
நான் வாழும் இவ் வாழ்க்கை நீர் தந்தது (2)
உந்தன் அன்பை நான் உணர்ந்துவிட்டேன்
உம் அன்பை சொல்லி என்றும் வாழ்ந்திடுவேன் (2)

இயேசுவே எந்தன் இராஜனே
இயேசுவே எந்தன் நேசரே (2)

  • Page 2 of 2
  • 1
  • 2